Sunday, October 30, 2016
Thursday, October 27, 2016
Wednesday, October 26, 2016
More historic evidences for the existence of metal furnaces – hundreds of casting tubes of clay, smelting buckets are found

Mud tubes used for casting metal,
mud furnaces and traces of molten iron are found around the places of
Porpanaikkottai and Thiruvarangulam. A site is located in the southern parts of
Porpanaikkottai Fort by Manganoor Manikandan, founder Pudukkottai Archeological
Research Foundation. A Heritage walk has been organized by this foundation
which is lead by Pudukai Selva, and C.A. Manikandan under the guidance of
Melappanaiyoor Rajendren. The team has identified
Terracotta pipes which might have used for
casting molten metal. They have also found furnaces made of stone and mud in
this area.
Manganoor Manikandan opine that it
confirms the historic data available at hand says that there existed metal
furnace.
The state of Pudukkottai has
published a state manual which is composed by K.R.Venkatrama Ayyar. The manual
was published in the year 1938. This state manual has references to the rule of
Veerapandiya of 13th century.
It clearly states that in the fourth year of Veerapandiyans rule there
were several sites of smelting units.
Moreover the statistical gazette
which is published in the year 1813 also
mentions the presence of several tracts of iron ore.
Another reference to the fact is
present in the Bailey Report of 1811. This report say that every
year iron ore which was worth Rs.1300 is extracted from this area. The same
report further says that even at the beginning of the 19th century
these iron smelting furnaces were functioned.
Evidences for the Iron Smelting
Furnaces
The area spreading across
Thiruvarangulam to Porpanaikkottai is littered
with iron wastage, Mud furnaces, and buckets used for extracting the
iron ore. They are present in ruined shape.
The
metal furnace at Porpanaikkottai and the global data of ancient furnaces.
There was a furnace which is used
to extract silver existed in the year
483 BC at Attica in Athens of Greece. Similar metal furnace was found in
Armenia which dates back to 300 BC. Another ancient metal furnace was
discovered at Palestine which dates back to 1200 BC. The furnace present at
Porpanaikkottai is similar to the structures mentioned above.
Sennakkuzhi furnace and
Sanga Tamil
The pond inside the fort is
called neeravi, and the other pond is called pani nazhalm. These names
themselves proves that they are chaste Sanga Tamil words.
The ancient furnace at
Porpanaikottai is called as Sennakkuli, which is chaste Sanga Tamil Noun for a pit with red
fire which is similar to tongue. The Tamil word Sen means the colour red, and the
word “na” stands for the fire flames which danced like tongue and the word
kuzhi depicts pit. From this linguistic analysis one can easily understand that
these pits were once served as furnaces, where fire burnt like tongue.
These data confirm that
these furnaces must be functioned from
the Tamil Sanga Period.
Evidences that prove the
site as a Furnace
Some may think that if the furnace
is on laterite stone it itself would have melted. But the ore is powdered into
small pellets and mixed up with carbon particles and put under first stage ore
extraction, in which the mix is heated up and concentrated with carbon
particles. This conditioned mix is used in the second stage. These facts can be
worth remembering here.
Moreover these kind of furnaces
can only be built near the area which is rich in ore. The fallow up visits to the sites
prove this too.
In this light we can understand
that even if the furnace was made of latrite stone it will not melt as per
physics.
The inner walls of pits make different noises when patted
with hand, shows the varied heat level exposure.
Are these pits water tanks for animals?
Manganoor Manikandan opines that
these pits are definitely not water tank for animals, for no animal will take
water from a stone pit, carved below its reach. No animal can kneel down and
take water. And who on earth would drill pits in laterite rock, that too in
many shapes.
So definitely these pits are not
water tanks for animals confirms Manikandan.
These pits
are stage two furnaces

பொற்பனைக்கோட்டைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செந்நாக்குழி உருக்கு உலைக்கு அருகில் இயங்கிவந்த உலோக தொழிற்சாலைகளின் சுடுமண் வார்ப்புக்குழாய்கள் , உருக்கு கலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிப்பு.
புதுக்கோட்டை
மாவட்டம் பொற்பனைக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரும்பு உருக்காலை
இயங்கியதற்கான தடயங்கள் உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு
உலைகள், உருக்குக்கலன்கள்
ஆகியவை பொற்பனைக்கோட்டை அமைந்துள்ள இடத்திற்கும் தென்பகுதியில் நூறு மீட்டர் தொலைவிலிருந்து
திருவரங்குளம் வரை பல இடங்களில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்
ஆ.மணிகண்டன் தலைமையில் மரபுநடை ஒருங்கிணைப்பாளர்கள் புதுகை செல்வா , கஸ்தூரிரெங்கன், ஆசிரியர்
மு.முத்துக்குமார் ,பத்திரிக்கையாளர்கள்
பகத்சிங், ம.மு.கண்ணன், இயற்கை வேளாண் ஆர்வலர்
சீ.அ.மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவின் கள ஆய்வின் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டைப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகள்
இயங்கியதற்கான வரலாற்றுச் சான்றுகள்
புதுக்கோட்டை
சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938
ல்
வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில்
ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள
பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதுமட்டுமின்றி
1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின்
புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல
வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
இதற்கு
முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு
ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி
எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்..

இரும்பு
உருக்கு உலை தடயங்கள்
திருவரங்குளம்
பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும்
இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின்
மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை
பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு
பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் .
உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த
நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டை
உலோக உருக்கு ஆலையும் உலகளாவிய சான்றுகளும்:
நமது
குழுவினாரால் மேற்கொள்ளப்பட்ட மரபுவழி பயணத்தின் போது , பொற்பனைக்கோட்டைக்கு
அருகே செம்புராங்கற்பாறை படுகையில் அமைந்துள்ள இவ்வமைப்பு உலோக உருக்காலை என
செய்தி வெளியிட்டிருந்ததோடு இந்த அமைப்பு குறித்து திரட்டப்பட்ட தகவல்களின் படி , கி.மு 483
-ஐச்சார்ந்த
பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ள
வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை அமைப்பும் , ஆர்மேனியாவிலுள்ள கி.மு
300-ஐ சேர்ந்த பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பும் , பாலஸ்தீனத்தில் கி.மு 1200-ஐ சேர்ந்த பழமையான
உலோகப்பிரிப்பு அமைப்புகளோடும் இவ்வமைப்பு ஒத்துப்போவதையும் அனுமானித்தோம்.
செந்நாக்குழி
நெருப்பு உலையும் – சங்கத்தமிழும்
இந்தக்குழிக்கு
அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு
மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின்
பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழி என்று
அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற
நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு
சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு
வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக
இயங்கியதையும் , தமிழர்களின்
பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில
காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது இதே
போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது
கிடைக்கப்பட்ட
தகவல்களும் , தரவுகளும்
, பெயர்களும்
சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக
அமைகிறது.

உருக்குலை
என்பதற்கான சான்றுகள்
இரும்புத்தாதுவாக
உள்ள லேட்டரைட் பாறையில் உருக்காலை இருந்தால் அது உருகி இருக்கக்கூடும் என சிலர்
கருதக்கூடும் ஆனால் உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் தாதுக்கள் முதலாவதாக
சிறுதுகள்களாக மாற்றப்பட்டு பின்பு பொடியாக மாற்றிய பிறகு அத்துடன் கரித்தூளையும்
கலந்து அதனை முதல்நிலை தாதுப்பிரிப்பு பணிக்கு உட்படுத்திடும் வகையில் உலோகத்தாது
அதிக வெப்பத்தில் வறுக்கப்பட்டு கார்பன் துகள்களுடன் அடர்ப்பிக்கப்படுகிறது இதை அடுத்தக்கட்ட
இரும்பு உருக்கு நிலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தொல்லியல்
ஆய்வுகளிலும் உலோக உருக்கு வரலாற்று பதிவுகளிலும் , தற்கால உலோகப்பிரிப்பு
நடைமுறையோடும் ஒப்பிட்டு அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும் மூலப்பொருட்கள் அதிகம்
கிடைக்கும் இடங்களிலேயே தொழிற்சாலைகள் அமைவது இயற்கை அதன்படி இரும்புத்தாது
உருக்கு உலைக்கு அருகிலேயே தாதுக்கள் வெட்டியெடுக்கப்பட்டிருப்பதையும், இதன்
அருகாமைப்பகுதிகளில் உருக்குக்கழிவுகள் விரவிக்கிடப்பதையும் தொடர் கள ஆய்வின்
மூலம் கண்டறிந்து வருகிறோம்.
இந்நிலையில்
இரும்பின் மூலப்பொருளான லேட்டரைட் பாறையில் உருக்கு உலை அமைப்பு அமைக்கப்பட்டாலும்
அது உருகுவதற்கு இயற்பியல் முறைப்படி சாத்தியமில்லை மேலும் அது உருகிவிடும் என்று
கூறும் கருத்து அறிவியலுக்கு புறம்பானதாக அமைந்துவிடும்.

உருக்கு
குழிகளின் மேல் வரம்புகளில் அதிகவெப்பத்தை தாங்கும் செராமிக் மட்பாண்டங்களையோ
அல்லது கலப்பு மண் உலோகக்கலன்களையோ அமரவைக்கும் வகையில் குழியின் மேற்புறத்தில்
சிறு வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும் இந்த அமைப்புகளில் காணலாம். அதுமட்டுமின்றி
காற்றடிக்கும் துருத்தியை இணைக்கும் காற்று செலுத்து குழாயை பகுதியளவு பாறையிலும்
அதன்மேல் மண் பூச்சு அமையும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
உருக்கு
குழி அமைப்பில் கீழ்ப்பகுதியில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக பாறையின்
உட்பகுதியில் இருந்த வாயுக்கள் ஆவியானதைத்தொடர்ந்து கையால் தட்டும்போது "தொப்
தொப்" என்ற மாறுபட்ட ஒலி எழுவதை உணரமுடிகிறது, இவ்வமைப்பு தவிர்த்த
ஏனைய இடங்களில் இவ்வொலி எழும்புவதில்லை.

இது தோற்றத்தில் நீர்வரத்து பாதைபோல
தோற்றமளிக்கக்கூடும். மிகப்பெரிய கோட்டையை அமைத்துவிட்டு அதன் அருகிலேயே
அவர்களுக்கு தேவையான ஆயுத தடவாளங்களை செய்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும் இது
தண்ணீரை சேமிக்கும் தொட்டியென கருதும்பட்சத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில்
தனித்தனி தொட்டிகளை வட்ட வடிவிலும் , நீள் வட்ட வடிவிலும் , கதிர்கோல் வடிவிலும்
அமைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும், இத்தொட்டியில்
மிருகங்களுக்கு தண்ணீர் வைக்கும் தொட்டி என்ற கருதும் பட்சத்தில் சமதள பரப்பிலோ
அல்லது மேலே அமைக்கப்படும் தொட்டியிலோ, சாய்வான
நீர்நிலைகளிலிலோ தண்ணீரை குதிரை, வேட்டை நாய் உள்ளிட்ட
விலங்குகள் தண்ணீர் அருந்த இயலும் அதற்கும் கீழாக உள்ள நீரை படுத்துக்கொண்டோ
அல்லது முட்டிப்போட்டோ தண்ணீர் குடிக்காது என்ற விலங்குகளின் நடைமுறை
வாழ்வியலையும் ஒப்பு நோக்கும்போது இது தண்ணீருக்கான தொட்டி இல்லை என்பது
புலனாகும்.

கோட்டையின்
தென்புறம் இயங்கிய இரண்டாம் கட்ட வார்ப்பு ஆலைகள் :
பொற்பனைக்கோட்டையின்
இரண்டாம்கட்ட உருக்கு ஆலைகளாக செயற்பட்ட உலோக வார்ப்பு அமைப்பு தென்புறமாக சுமார் 200
மீட்டர்
தொலைவில் இரும்பு வார்ப்பு ஆலைகள் இயங்கி வந்துள்ளது. மேலும் இங்கு
மூலப்பொருட்கலான செம்புராங்கற்கள் காணப்படவில்லை எனவே இந்த ஆலைக்கு தேவையான
இரண்டாம்நிலை மூலப்பொருட்கள் முதற்கட்ட உலோகப்பிரிப்பு ஆலையிலிருந்தே
பெறப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு
பெறப்பட்ட கார்பன் இரும்பு கூட்டுக்கலவை சுடுமண் இரும்புக்கலன்களில் உருக்கப்பட்டு
அவை சுடுமண் வார்ப்பு குழாய்களில் ஊற்றப்பட்டு நீண்ட கம்பி போன்ற இரும்பின்
அடிப்படை அமைப்பாக பெறப்பட்டிருப்பதை இங்கு விரவிக்கிடக்கும் சுடுமண் வார்ப்புகள்
மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த சுடுமண் குழாய்களின் கீழ்ப்பகுதி மண்படுகையில்
புதைக்கப்பட்டு அதனுள் உருகிய உலோகம் ஊற்றப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம்
காணப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. மேலும் இந்த வார்ப்பு
இரும்பு மூலமாக போர்த்தடவாளங்கள் , பாத்திரங்கள் , வாகனங்கள், இருப்பிடம்
போன்றவற்றிற்கான உலோக மூலப்பொருட்களை இப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக தயாரித்து
வந்துள்ளதோடு உலோக உருக்கு அறிவியல் நுட்பத்தில் ஒரு மேம்பட்ட சமூகமாக
வாழ்ந்துள்ளதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
உலகம் முழுவதும் ஒரே மொழி பேசப்பட்டதற்கான சான்று – புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்லுனி ஆறு என்று என்று
தற்போது அழைக்கபடும் ஆறு உள்ளது இதன் கரையோரப்பகுதி அமபலத்தான் மேடு என்ற பழமையான
வாழிடம் உள்ளது. இவ்விடம் குறித்த தகவலை நக்கீரன் பத்திரிக்கையாளர்
பகத்சிங் அளித்த தகவலின் அடிப்படையில்
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் தொல்லியல்
ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் , தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்
ஆசிரியர் கஸ்தூரிரங்கன் , தலைமை ஆசிரியர் வீர சந்திரசேகரன் ,இளையராஜா , சமூக
ஆர்வலர் மதியழகன் ஆகியோர் அடங்கிய குழு
கள ஆய்வு மேற்கொண்டதில் மிக அபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல்

வில்வன்னி ஆறு (வில்லுன்னி ஆறு) வரலாறு

வன்னி மரமும் தாய்தெய்வ வழிபாடும்
இந்த மரம் பற்றிய செய்தி ரிக் வேதம், ராமாயணம்
மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன. கல்கத்தாவிலும் ஏனைய மாநிலங்களிலும் விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதையும் அதே விழாவின் பின்னணியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் 'பாரிவேட்டை' என்ற பெயரில் திருவிழா நடப்பதையும் இவ்விழாவில் வன்னி மரத்தின் கீழ் நின்று வில்
எய்தும் விழா கொண்டாடப்பட்டு வந்தததையும்
சான்றுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் வழியாக இந்தியா முழுவதுமாக
தாய்தெய்வ வழிபாட்டு முறையும் வன்னி மரத்தின் தொடர்பையும் அறிய முடிகிறது.
தாழி புதையிடமும் இலக்கிய தொடர்பும்

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக
வெற்கொல்லாக் கூற்றே என்று நற்றிணையின் 271 பாடல் தாழி
குறித்த குறிப்பு தருகிறது.
பானைக்குறியீடுகள் சொல்ல வருவது என்ன?
பானைக்குறியீடுகள் சொல்ல வருவது என்ன?

மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமது செய்தி யாருக்கோ
தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில் அக்காலத்தில் இருந்த
நடைமுறையிலிருந்த எழுத்துக்களை பயன்படுத்தி எழுதி வைத்துள்ளதை நாம் கீரல் குறியீடுகள் என்கிறோம், இத்தகைய
குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒற்றை குறியீட்டில் வெளிப்படுத்தியிருப்பதை
நாம் உணரமுடிகிறது. நமக்கு கிடைத்துள்ள குறியீடுகளில் மூவுலகை குறிப்பதாகவும், இவை அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் ஒற்றை சக்தியை நோக்கி இவர்களது உயிர் பயணிப்பதாகவும்,அருகாமையில்
இருக்கும் ஏணி போன்ற அமைப்பு மேற்பகுதியில் குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகன்றும்
இருப்பதன் மூலம் அதி உயரத்திற்கு இவர்களது பயணம் இருப்பதாய் இவர்கள் கற்பனை
செய்திருக்க வேண்டும் என அனுமானிக்க முடிகிறது.மேலும் இக்கருத்தை "கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம்
எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி"
என்று புறநானூற்றின் 228 செய்யுள் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.
என்று புறநானூற்றின் 228 செய்யுள் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.

இந்தக்குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பதாக கிரேக்க தொல்லியலாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தியத்தொல்லியலாளர்களின் பெருவாரியானவர்கள் இக்குறியீட்டை மட்பாண்டம் செய்பவரின் அடையாளம் என்று கூறிவரும் நிலையில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், மற்றும் இந்தியாவின் பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக்கொண்டும் இதனை உலகலாவிய மொழிக்குறியீடாகவே பார்க்கவேண்டியுள்ளது. மேலும் மண் அடுக்கைமட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின் காலக்கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது என்பதால் அறிவியல் அடைப்படையில் மொழித்தோற்றத்தை முன்வரைவு செய்ய தொல்லியலாளர்கள முன்வரவேண்டும்.
அறிவியல்பூர்வமாக இதனை ஒப்புநோக்கும்போது தலைகீழாக அமைக்கப்பட்டுள்ள முன்னோடி கருத்தெழுத்து பூமி,நீர்,காற்று ஆகிய உணரக்கூடிய பொருட்கள் ஒருங்கிணைந்து ஒளி,வெப்பம் எனும் ஒருகமைந்த நிலையாக இந்த உடல் மாறியதை வெளிப்படுத்தியிருக்கும் குறியீடாகவும் இதனை கருதலாம்.
அம்பலத்திடலில் கருப்பு வெள்ளை பானை ஓடுகளும் கருப்பு ஓடுகளும்,
தாழியின் பெரிய பாண்ட ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
ஏ.சுந்தரா என்பவர் பெருங்கற்படை அகழாய்வுகளில் கிடைக்கும்
குறியீடுகள் 3000 – 4000 வருடம் வரை
இருந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும் இத்தகைய குறியீடுகளை பின்னர் தமிழியாக
வளர்ச்சியடைந்திருக்கும் என்கிறார்.
தமிழகத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட கரூர்,
உறையூர்,அழகன்குளம்,வல்லம்,கொடுமணல்,ஆகிய ஊர்களின் கீழ் அடுக்கில் குறியீடுகள்
பொறித்த பானை ஓடுகளும், இரண்டாம் அடுக்கில் தமிழி
எழுத்துக்களும் பொறித்தவையாக உள்ளன. இதன் மூலமாக இக்கீரல்களை
எழுத்தின் முன்னோடி அடையாளம் என அறியலாம்.
அதுமட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் செம்பியன் கண்டியூரில்
கிடைத்த பானைக்குறியீடுகள் இங்கு கிடைத்த பானைக்குறியீடுகளோடு முழுமையாக
ஒத்துபோகிறது. மூன்று கோடுகள் இணையும் கூம்பு வடிவக்குறியீடு அதிக அளவிலும்,
கூம்பு வடிவ படிநிலை குறியீடு இவற்றோடு இணைத்து வரையப்பட்டுள்ளதன் மூலம்
இதனைக்குறியீடாகவோ அல்லது கூட்டுப்பொருள் கருத்து வெளிப்பாடாகவோ கருதலாம்.
குறியீட்டின் காலம்
இந்த குறியீட்டு எழுத்துகள் ,
எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும்
பெருங்கற்கால குறியீடாக வரையறுக்கப்பட்டுள்ளதாலும் இந்தக்குறியீடுகளை 3500 ஆண்டுகளுக்கு மேம்பட்டவையாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு
முழுமையாக கிடைத்துள்ளதால் இந்தக்குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனைமூலமாக ஓரளவு
துல்லியமாக வெளிப்படுத்த முடியும் மேலும் வெப்ப ஒளிர்ம சோதனைகள் (thermo lominiscence dating) உள்ளிட்ட
அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான கால வரையறைக்கு வர முடியும் , இந்நிலையில் எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளைகேகொண்டு தொடர்
ஆய்வுகளையும், மேற்கொண்டு வருகிறோம் .
அம்பலத்திடல் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
எமது குழுவினரால் இதே பகுதியில் தொடர் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் புதிர் அமைப்புகள், இதில் சுண்ணாம்பு
கற்காரையுடன் கூடிய தரைத்தளம், சுடாத மண் உருளைகள் மற்றும் சுண்ணாம்பு கற்காரை
கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது இது தொடர்பாக தொடர் ஆய்வுகள்
மேற்கொண்டு வருகிறது நமது அமைப்பு
Friday, October 21, 2016
Ancient river bank civilization – that existed before mankind invented written script, was found near Pudukkottai

The team led by the founder
Manganoor Manikandan, and Melappanaiyur Rajendren and they members Kasthuri
Rengan, Head master Veera Chandrasekaran, Ilayaraja, Siddha Physician___
surveyed the vast area for evidences.
Founder Manganur Manikandan expressed
that
Ramasamypuram, Mangalanadu-
Ambalathidal
The site is spread across 173 acres
and located in the banks of Villuni River, in the boundaries of Ramasamypuram
and Mangalanadu. Trees which belong to desert area are grown here.
Asparagus, Vanni Tree, Cactus, Aloe Vera
are dense in this area. Dunes which have Calcium particles can be located here. Some
of the Dunes have evidences for buried thazlis.
The land is filled with black and red pottery pieces , along with burnt
out metal, mud casting for metal shapes, crystal stones.
Vilvanni River
This river originates at Maramadakki
River, and merges with Ambuli River, at
Ruthrachinthamani. It reaches Bay of Bengal at its 37th km.
The village near the estuary
is called Villunivayal, the name suggests a clue that in the ancient
past the river might have been called as Villuni River.
Tamil Sanga Literature mentions this
river as Vilvanni, and we can assume that this name has been eroded into to
Villuni. To prove this theory the river bank is dense with Vanni Trees. Pathittruppathu and Natrinai Clearly states
the relationship between Vanni Tree and Thazhi.
These literature shows that it
was common practice to bury thazhis under
the Vanni Tree.
Vanni Tree and matriarchal society
The Vanni tree is mentioned in the
Rig Veda, the Ramayana and the Mahabharath.

On the same day most of the temples
of Tamil Nadu have “Parivettai” fest.
In this fest the priest stand under
the Vanni Tree and shoot an arrow from his bow. This practices has ancient
roots for it has been mentioned in Sanga Literature. These evidences proves that
our ancient Indian societies has
matriarchal roots.
Origin of Written Script
The Divagara Nigandu states the
evolutionary development of written language. It developed in various stages as
pictograph, logo graph, syllabary and finaly phonetic.
What do the graffiti at the pottery
denote.

The graffiti found here on pots are
of two types, one is phonetic and the other is a pictograph.
The pictograph looks like a upside
down trident. The Greek archaeological experts opine that these symbols depicts
the burial site of a warrior.
But Indian Archeological experts say
that this is a simple mark of pot makers. These kind of marks are found in Sri
Lanka, Greece, and other ancient archeological sites of India. In this light
the symbols and pictograph must be the universal language of the ancient times.
These markings are not an expression
of pot makers. We need the approach them from the origin of written script and
scientific research. The marks may also
depict the five basic elements of life.
Time of the graffiti marks
Undoubtedly these graffiti must be used in those times when markings were only used for communication, i.e., before the times of the written script.
The bones found at the site can be
used for dating test., and the foundation is taking proper steps to find the
actual time of the civilization.
(Thermo luminescence dating)


This is also an evidence that these
markings are primitive forms of written script.
Similar graffiti is found in Sembian
Kandiyur, Tanjore Dt. This clearly shows that
these symbols are not just a mark of a pot maker, but they are actually
communication symbol used in the ancient past .
Other archeological finds at the
Ambalath Thidal
Subscribe to:
Posts (Atom)
ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...
-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர் , குலோத்துங்க சோழர்க...
-
மங்களாகோவில் மகாவீரர் சிற்பம் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் , மங்களாகோவில் கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பிள்...
-
கரு . இராசேந்திரன் மேலப்பனையூர் தமிழகக்கோயில் கட்டடக் கலையில் நாகரம் , திராவிடம் , வேசரம் என்ற 3 வடிவங்களைப் பற்றி சிற்பநூல்கள் பேசுகின...